செய்திகள்
கைது

சேத்துப்பட்டு அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2021-06-15 16:44 IST   |   Update On 2021-06-15 16:44:00 IST
சேத்துப்பட்டு அருகே சாராயம் விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷமங்கலம் கிராமத்தில் மணி (வயது 50)) என்பவரும், அரசம்பட்டு கிராமத்தில் பாலாஜி (25) என்பவரும், குடுமித்தாங்கல் கிராமத்தில் கன்னியப்பன் (55) என்பவரும் சாராயம் விற்றது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News