செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போடும் முகாம்

Published On 2021-06-12 16:19 GMT   |   Update On 2021-06-12 16:19 GMT
வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அத்திப்பாக்கம் கிராமம் ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
வந்தவாசி:

வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அத்திப்பாக்கம் கிராமம் ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமேகலை தலைமையிலான மருத்துவக் குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொரோனா தடுப்பூசி போட்டனர்.

மேற்கண்ட 3 இடங்களிலும் 150-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் மேற்பார்வையாளர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் லீலாவினோத், நர்சு மலர்கொடி மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News