செய்திகள்
தற்கொலை

மயிலாடுதுறை அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை

Published On 2021-06-12 21:08 IST   |   Update On 2021-06-12 21:08:00 IST
மயிலாடுதுறை அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 45). கொத்தனாரான இவருக்கும் சீதாலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் ஒரு வருடமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி பாலாஜி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தாய் இந்திராணி (65) கொடுத்த புகாரின்பேரில், பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News