செய்திகள்
விபத்து பலி

கீரனூர் அருகே மோட்டார் சைக்கிளுடன் விழுந்தவர் பலி

Published On 2021-06-12 19:01 IST   |   Update On 2021-06-12 19:01:00 IST
கீரனூர் அருகே மோட்டார் சைக்கிளுடன் விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:

கீரனூரை அடுத்த கொட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 54). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததால் மோட்டார் சைக்கிளுடன் தவறி கீழே விழுந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தனர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News