செய்திகள்
இலுப்பூரில் ஊரடங்கை மீறிய 21 பேர் மீது வழக்குப்பதிவு
ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 19 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 2 பேர் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அன்னவாசல்:
இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 19 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த 2 பேர் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 19 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.