செய்திகள்
தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2021-06-05 12:06 GMT   |   Update On 2021-06-05 12:06 GMT
கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சீதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேங்கிக்கால் தீபம்நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 50). இவரின் மனைவி சீதா (45). இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். சீதா கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை.

இதனால் மனமுடைந்த சீதா சம்பவத்தன்று விஷத்தை குடித்து வீட்டார். மயக்கமடைந்து கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீதா பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News