செய்திகள்
திருவண்ணாமலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரிப்பு
கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருவதை அறிந்த மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக திடீரென தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து உள்ளது.
திருவண்ணாமலை:
கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ளது. சராசரியாக தொற்றால் ஒரு நாளுக்கு 5 பேர் வரை உயிரிழக்கின்றனர். தினசரி 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை கட்டுப்படுத்த ஒரே தீர்வாக தற்போது தடுப்பூசி கருதப்படுகிறது. அதன்படி தடுப்பூசி முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தடுப்பூசி முகாம்கள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆரம்ப கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டினர். அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சினர். இதனால் முகாம்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருவதை அறிந்த மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக திடீரென தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். மக்களிடம் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் அதிகரித்து உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ளது. சராசரியாக தொற்றால் ஒரு நாளுக்கு 5 பேர் வரை உயிரிழக்கின்றனர். தினசரி 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை கட்டுப்படுத்த ஒரே தீர்வாக தற்போது தடுப்பூசி கருதப்படுகிறது. அதன்படி தடுப்பூசி முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தடுப்பூசி முகாம்கள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆரம்ப கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டினர். அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சினர். இதனால் முகாம்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருவதை அறிந்த மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக திடீரென தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். மக்களிடம் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் அதிகரித்து உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.