செய்திகள்
திருவண்ணாமலையில் கொரோனா தொற்று குறையும் நிலையில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-ம் அலை அதிகரிக்க தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அல்படுத்தி உள்ளது.
இந்த முழு ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ரோந்து பணியிலும், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் வழக்கத்தை விட பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. சில பகுதிகளில் பஸ், ஆட்டோக்கள் மட்டுமே ஓடவில்லை. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது போன்று காணப்பட்டது. சோதனை சாவடிகளில் போலீசார் விசாரணை நடத்தி வாகனங்களில் செல்ல அனுமதித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறையும் நிலையில் பொதுமக்களில் சிலர் வெளியில் சுற்றி வருவதால் தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்படும். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-ம் அலை அதிகரிக்க தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அல்படுத்தி உள்ளது.
இந்த முழு ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ரோந்து பணியிலும், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் வழக்கத்தை விட பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. சில பகுதிகளில் பஸ், ஆட்டோக்கள் மட்டுமே ஓடவில்லை. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது போன்று காணப்பட்டது. சோதனை சாவடிகளில் போலீசார் விசாரணை நடத்தி வாகனங்களில் செல்ல அனுமதித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறையும் நிலையில் பொதுமக்களில் சிலர் வெளியில் சுற்றி வருவதால் தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்படும். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.