செய்திகள்
கோப்புப்படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது - 34 பேர் உயிரிழப்பு

Published On 2021-06-03 01:31 IST   |   Update On 2021-06-03 01:31:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 996 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 996 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 409 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,924 ஆக உயர்ந்தது. இதில் 9,382 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 396 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 58 ஆயிரத்து 517 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சைப் பலனின்றி 22 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 உயர்ந்துள்ளது. 4,876 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News