செய்திகள்
போளூரில் சாராயம் விற்ற பெண் கைது
போளூரில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போளூர் சாவடி தெருவில் வீட்டில் சாராயம் விற்ற சாந்தி (வயது 57) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.