செய்திகள்
விபத்து பலி

அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

Published On 2021-06-01 16:28 GMT   |   Update On 2021-06-01 16:28 GMT
அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி சோலைசெரிப்பட்டியை சேர்ந்தவர் சடையன். இவரது மனைவி பிச்சாயி (வயது 60). உடல் நலம் சரியில்லாமல் இருந்த பிச்சாயியை அவரது மகன் ராஜூ ஒரு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த பிச்சாயி திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News