செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஆவூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-05-30 16:18 IST   |   Update On 2021-05-30 16:18:00 IST
விராலிமலை ஒன்றியம் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
ஆவூர்:

விராலிமலை ஒன்றியம் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை விராலிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காமு. மு.பி.மணி தொடங்கி வைத்தார். முகாமில் ஆவூர் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த 18 வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்ட 180 பேர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல தொண்டைமான் நல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த 130 பேரும், கசவனூர் அரசு பள்ளியில் நடைபெற்ற முகாமில் அப்பகுதியை சேர்ந்த 109 பேரும், விராலிமலையில் தனியார் நிறுவனத்தில் நடந்த முகாமில் 110 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விராலிமலை வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ், விராலிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் (வட்டார ஊராட்சி), ரமேஷ் (கிராம ஊராட்சி) மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர். முகாமில் அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News