செய்திகள்
கொரோனா வைரஸ்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா

Published On 2021-05-29 11:05 GMT   |   Update On 2021-05-29 11:05 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 159 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 79 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 41 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 37 பேரும் என மொத்தம் 316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,623 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 52 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குன்னம் தாலுகா பரவாய் மேற்கு தெருவை சேர்ந்த 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 4,719 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,851 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 62 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 775 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
Tags:    

Similar News