செய்திகள்
கிராம மக்களுக்கு கபசுர குடிநீர்

திருப்புவனம் அருகே கிராம மக்களுக்கு கபசுர குடிநீர்

Published On 2021-05-26 17:29 IST   |   Update On 2021-05-26 17:29:00 IST
கானூர் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சமூக இடைவெளி விட்டு பொதுமக்களை நிற்க வைத்து கபசுரகுடிநீர், பல்வேறு வகையான சூப்களை வழங்கினார்கள்.
திருப்புவனம்:

திருப்புவனம் அருகே கானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தனியாக வாட்ஸ் அப் குழு தொடங்கி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருவதால் கிராம மக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக கபசுர குடிநீர், முட்டை, பயறு வகைகள், பல்வேறு வகையான சூப்கள் தயார் செய்து இலவசமாக வழங்கினர். கானூர் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சமூக இடைவெளி விட்டு பொதுமக்களை நிற்க வைத்து கபசுரகுடிநீர், பல்வேறு வகையான சூப்களை வழங்கினார்கள். இவர்களின் சமுதாய பணியை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

Similar News