செய்திகள்
ரவுடியின் கல்லறையில் பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்- பட்டா கத்தியால் கேக் வெட்டிய குழந்தையால் பரபரப்பு
கொலையான ரவுடியின் கல்லறையில் அவரது குழந்தையால் பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை திப்புராயப்பேட்டையை சேர்ந்தவர் திப்லான் (வயது24). ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்து வந்தநிலையில் திருமணத்துக்குப் பின் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து பெயிண்டிங் வேலை செய்து மனைவி, குழந்தையுடன் திருந்தி வாழத் தொடங்கினார்.
இதை விரும்பாத கூட்டாளிகள் அவர் மீது ஆத்திரமடைந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு திப்லானை அவரது கூட்டாளிகளான சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது, பாம் ரவி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
தேங்காய்திட்டில் வைத்து அடித்து உதைத்து சரமாரியாக தாக்கியதுடன் கட்டையால் அடித்ததில் திப்லானின் கை, கால் முறிந்தது. இந்தநிலையில் அவரை அந்த இடத்திலேயே குற்றுயிரும், குலையுயிருமாக போட்டு விட்டு கூட்டாளிகள் தப்பிச் சென்றனர். மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட திப்லான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் உப்பளம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாம் ரவி, சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது உள்பட பலரை கைது செய்தனர்.
இந்தநிலையில் கடந்த வாரம் திப்லான் பிறந்த நாளையொட்டி அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. அங்கு திப்லானின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
அப்போது வாலிபர் ஒருவர் திப்லானின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கையில் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்டச் செய்தார். திப்லான் கொலைக்கு பழி வாங்கும் வகையில் பாடலை பாடியும் சபதம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருவடிக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற ஆட்டோ மணி (26) என்பவரை கைது செய்து பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர். கொலை செய்யப்பட்டவரின் பிறந்தநாளையொட்டி அவரது குழந்தையின் கையில் பட்டாக் கத்தியை கொடுத்து கேக் வெட்ட செய்து பழிக்குப்பழி வாங்க சபதம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை திப்புராயப்பேட்டையை சேர்ந்தவர் திப்லான் (வயது24). ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்து வந்தநிலையில் திருமணத்துக்குப் பின் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து பெயிண்டிங் வேலை செய்து மனைவி, குழந்தையுடன் திருந்தி வாழத் தொடங்கினார்.
இதை விரும்பாத கூட்டாளிகள் அவர் மீது ஆத்திரமடைந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு திப்லானை அவரது கூட்டாளிகளான சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது, பாம் ரவி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
தேங்காய்திட்டில் வைத்து அடித்து உதைத்து சரமாரியாக தாக்கியதுடன் கட்டையால் அடித்ததில் திப்லானின் கை, கால் முறிந்தது. இந்தநிலையில் அவரை அந்த இடத்திலேயே குற்றுயிரும், குலையுயிருமாக போட்டு விட்டு கூட்டாளிகள் தப்பிச் சென்றனர். மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட திப்லான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் உப்பளம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாம் ரவி, சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது உள்பட பலரை கைது செய்தனர்.
இந்தநிலையில் கடந்த வாரம் திப்லான் பிறந்த நாளையொட்டி அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. அங்கு திப்லானின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
அப்போது வாலிபர் ஒருவர் திப்லானின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கையில் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்டச் செய்தார். திப்லான் கொலைக்கு பழி வாங்கும் வகையில் பாடலை பாடியும் சபதம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருவடிக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற ஆட்டோ மணி (26) என்பவரை கைது செய்து பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர். கொலை செய்யப்பட்டவரின் பிறந்தநாளையொட்டி அவரது குழந்தையின் கையில் பட்டாக் கத்தியை கொடுத்து கேக் வெட்ட செய்து பழிக்குப்பழி வாங்க சபதம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.