செய்திகள்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனா தடுப்பூசி நிறுவனத்திற்கு கவர்னர் தமிழிசை அழைப்பு

Published On 2021-05-24 08:17 IST   |   Update On 2021-05-24 08:17:00 IST
கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையங்களை புதுவையில் ஆரம்பித்தால் வேலைவாய்ப்பும், கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் அதிக பயன் அளிக்கும் என்று கவர்னர் தமிழிசை கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை தெலுங்கானா கவர்னராகவும் இருப்பதால் அங்கு சென்றுள்ளார்.

தெலுங்கானா ராஜ்பவனில் காணொலியில் நடந்த நிகழ்வில் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் தயாரிக்கும் முயற்சியிலும், மத்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. கண்டுபிடித்த கொரோனா சிகிச்சைக்கு பயன்தரும் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 2 டி.ஜி. மருந்தை தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவன தரப்புடன் கவர்னர் தமிழிசை கலந்துரையாடினார்.

ஸ்புட்னிக் தடுப்பூசி தற்போது தெலுங்கானாவில் 3 இடங்களில் தயாரிக்கப்படுகிறது.



அதேபோல் தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையங்களை புதுவையில் ஆரம்பித்தால் வேலைவாய்ப்பும், கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் அதிக பயன் அளிக்கும் என்று கவர்னர் தமிழிசை கோரிக்கை வைத்தார்.

இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதாக டாக்டர் ரெட்டிஸ் குழுமத்தினர் உறுதி அளித்தனர். சாத்தியக்கூறுகள் தென்பட்டால் புதுவை முதல்-அமைச்ர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்து அதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்

Similar News