செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் ஒரே நாளில் 34 பேரின் உயிரை பறித்த கொரோனா

Published On 2021-05-24 02:46 IST   |   Update On 2021-05-24 02:46:00 IST
புதுச்சேரியில் 1,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,903 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 37 பேருக்கு தொற்றுபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 1,903 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாய் நேற்று ஒரே நாளில் 34 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,359 ஆக உயர்ந்துள்ளது.

Similar News