செய்திகள்
கொரோனா தடுப்பூசி

மயிலாடுதுறையில் 2 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்

Published On 2021-05-23 18:57 IST   |   Update On 2021-05-23 18:57:00 IST
மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரத்சந்தர் தலைமை தாங்கினார். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 180 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதேபோல தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் 170 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்த 2 முகாம்களிலும் சேர்த்து 350 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டன. முகாமில் டாக்டர்கள் நந்தினி, யமுனா மற்றும் மருந்தாளுனர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டு பணியாற்றினர்.

இதற்கான ஏற்பாடுகள் வட்டார மருத்துவ அலுவலகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

Similar News