செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கு விதிமீறிய 29 பேர் மீது வழக்கு

Published On 2021-05-22 20:57 IST   |   Update On 2021-05-22 20:57:00 IST
முழு ஊரடங்கு காலத்திலும் இளையான்குடி பகுதியில் தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 29 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இளையான்குடி:

முழு ஊரடங்கு காலத்திலும் இளையான்குடி பகுதியில் தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 29 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் சென்ற இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அரசு விதிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேவையின்றி வெளியே வாகனங்களில் சுற்றக்கூடாது. தேவையின்றி சுற்றி திரிந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. மீறி தொடர்ந்து சுற்றி திரிந்தால் அபராத தொகை விதிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர்.

Similar News