செய்திகள்
மரணம்

காஞ்சீபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2021-05-22 15:02 GMT   |   Update On 2021-05-22 15:02 GMT
காஞ்சீபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த புள்ளலூர் காலனி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு தரைகிணற்றின் மேல் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி சுமதி காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News