செய்திகள்
கோப்புபடம்

ஊட்டியில் குழந்தை திருமணம் - சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

Published On 2021-05-21 09:04 GMT   |   Update On 2021-05-21 09:04 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கிராமத்தில் குழந்தை திருமணம் நடந்த சம்பவம் குறித்து போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கும், அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். கலெக்டர் உத்தரவின்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறையினர் அந்த பகுதிக்கு சென்று விசாரித்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் சிறுமியை திருமணம் செய்த அந்த வாலிபர் மீதும், திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News