செய்திகள்
முககவசம்

திருவெண்காட்டில் முககவசம் அணியாதவர்கள் 200 பேருக்கு அபராதம்

Published On 2021-05-20 11:27 GMT   |   Update On 2021-05-20 11:27 GMT
மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் எடுத்து கூறினார்.
திருவெண்காடு:

சீர்காழி தாசில்தார் ஹரிதரன் மேற்பார்வையில் மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அதிகாரிகள் ராதாகிரு‌‌ஷ்ணன், மணிமாறன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் போலீசாருடன் இணைந்து நேற்று திருவெண்காட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் எடுத்து கூறினார். சீர்காழி தாலுகா முழுவதும் முக கவசம் அணியாத 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News