செய்திகள்
வேட்டவலம் அரசு மருத்துவமனையில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு

வேட்டவலம் அரசு மருத்துவமனையில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு

Published On 2021-05-19 19:13 IST   |   Update On 2021-05-19 19:13:00 IST
வேட்டவலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி முகாமினை துணை சபாநாயகர் பிச்சாண்டி பார்வையிட்டார்.
வேட்டவலம்:

வேட்டவலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி முகாமினை துணை சபாநாயகர் பிச்சாண்டி பார்வையிட்டு, சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் மருந்துகள், தடுப்பூசிகள் போதிய அளவில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள், மருந்துகள் குறித்து தெரிவித்தால் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

தொடர்ந்து அணுக்குமலை கிராமத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட அவர் ஆவூர், கோணலூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி மற்றும் தேவையான மருத்துவ பொருட்கள் பற்றி கேட்டறிந்தார். அப்போது கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், வேட்டவலம் நகர செயலாளர் ப.முருகையன், நகர துணைச் செயலாளர் ரமேஷ், இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, பாலமுருகன், அன்சர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Similar News