செய்திகள்
கைது

திருவையாறில் பெண்ணை தாக்கியவர் கைது

Published On 2021-05-15 10:39 GMT   |   Update On 2021-05-15 10:39 GMT
வாகனத்தை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக திருவையாறு போலீசில் ஆரோக்கிய ஸ்டெல்லாமேரி புகார் செய்தார்.
திருவையாறு:

திருவையாறு ஸ்ரீராம் நகரை சேர்ந்த விவேக்ராஜ் மனைவி ஆரோக்கிய ஸ்டெல்லாமேரி(32). இவர் மோட்டார் சைக்கிளில் நாட்டு மருந்து கடையில் பொருட்கள் வாங்க கடை பக்கத்திலிருந்த ஆயில் ஸ்டோர் அருகில் வண்டியை வைத்துவிட்டு சென்றார்.

பின்னர் வாகனத்தை எடுக்க வந்தபோது ஆயில் ஸ்டோர் உரிமையாளர் செட்டித்தெரு சேர்ந்த கார்த்திகேயன்(39) என்பவர் ஆரோக்கிய ஸ்டெல்லாமேரியிடம் வாகனத்தை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக திருவையாறு போலீசில் ஆரோக்கிய ஸ்டெல்லாமேரி புகார் செய்தார்.

புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.

Tags:    

Similar News