செய்திகள்
கோர்ட்டு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சிறப்பு முகாமில் 41 கோர்ட்டு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-05-13 10:30 GMT   |   Update On 2021-05-13 10:30 GMT
சிறப்பு முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட 41 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான வசந்த லீலா உத்தரவின் பேரில் வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு வளாகத்தில் உள்ள சட்ட உதவி பழைய கட்டிடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து நீதித்துறை நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், எழுத்தர், சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

முகாமிற்கு வந்தவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் அடையாள அட்டை எண் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் பதிவு செய்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட 41 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News