செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது

Published On 2021-05-12 22:32 GMT   |   Update On 2021-05-12 22:32 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்தது
தூத்துக்குடி:

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்தது. தொடர்ந்து கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஆலையில் ஆய்வு செய்து உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இரவு, பகலாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது.

இந்த நிலையில் ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. நேற்று இரவில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி அளவில் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படும் என்று ஆலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News