செய்திகள்
கோப்புப்படம்

முழு ஊரடங்கில் கொரோனா தடுப்பு விதியை மீறியவர்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம்

Published On 2021-05-11 18:00 GMT   |   Update On 2021-05-11 18:00 GMT
வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கை அமல்படுத்தவும், கொரோனா தடுப்பு விதியை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார்.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கை அமல்படுத்தவும், கொரோனா தடுப்பு விதியை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் 3-வது மண்டல உதவிகமிஷனர் வெங்கடேசன் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் ஊழியர்கள் நேற்று ஊரீசு பள்ளி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வந்தவர்கள் மற்றும் தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மளிகை, காய்கறி, இறைச்சி, மீன், டீக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கின்போது முககவசம் அணியாத 96 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.19 ஆயிரத்து 200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 46 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.23 ஆயிரத்து 500-ம் என்று மொத்தம் ரூ.42,200 அபராதம் விதிக்கப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News