செய்திகள்
கம்மாபுரம் அருகே பெட்டிக்கடைக்காரரை தாக்கிய தந்தை, மகன் கைது
கம்மாபுரம் அருகே மதுபோதையில் பெட்டிக்கடைக்காரரை தாக்கிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
கம்மாபுரம்:
கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 55). பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். (55) சம்பவத்தன்று இவர் மதுபோதையில் ராஜாராமின் கடை முன்பு நின்று கொண்டு கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.
இதை ராஜாராம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஞானப்பிரகாசம் ராஜாராமை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஞானப்பிரகாசத்தின் மகன் துரைராஜ் (19) என்பவர் ராஜாராமை தாக்கியதோடு, அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜ், ஞானப்பிரகாசம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.