செய்திகள்
தற்கொலை

புதுவையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2021-05-11 16:34 GMT   |   Update On 2021-05-11 16:34 GMT
புதுவையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை:

புதுச்சேரி கலித்தீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் பாண்டியன். பழக்கடை வியாபாரி. இவரது மனைவி கமலா. இவர்களது மகன் பரத்போஸ். மகள் நிதிளஸ்ரீ (வயது16). இவர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் நிதிளஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News