செய்திகள்
தற்கொலை

புதுவையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2021-05-11 22:04 IST   |   Update On 2021-05-11 22:04:00 IST
புதுவையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை:

புதுச்சேரி கலித்தீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் பாண்டியன். பழக்கடை வியாபாரி. இவரது மனைவி கமலா. இவர்களது மகன் பரத்போஸ். மகள் நிதிளஸ்ரீ (வயது16). இவர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் நிதிளஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News