செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே மது விற்றவர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கச்சுவாடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ரவி (வயது 29) என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.