செய்திகள்
ஊட்டியில் 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் சுகாதார அதிகாரிகள் நேற்று நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதரன் மற்றும் சுகாதார அதிகாரிகள் நேற்று நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக மொத்தம் 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா காலம் என்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், தடை செய்த பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதரன் மற்றும் சுகாதார அதிகாரிகள் நேற்று நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக மொத்தம் 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா காலம் என்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், தடை செய்த பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.