செய்திகள்
நாமக்கல்லில் 104 மதுபாட்டில்கள் பறிமுதல்- வாலிபர் கைது
நாமக்கல் அருகே மது கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 104 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று சேலம் சாலை கார்னர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது சாக்கு பையில் மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய வாங்கி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செல்லப்பம்பட்டியை சேர்ந்த வீரமணி (வயது 30) என்பதும், முழு ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி செல்வதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 104 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.