செய்திகள்
பாகலூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பாகலூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
பாகலூர் அருகேயுள்ள பெலத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் ஆஞ்சனப்பா. இவரது மனைவி காயத்திரி (வயது 26). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காயத்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.