செய்திகள்
கோப்புபடம்

தூசி அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை

Published On 2021-05-07 15:19 GMT   |   Update On 2021-05-07 15:19 GMT
தூசி அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரின் மகன் மேகநாதன், சுவீட் கடையில் இனிப்பு மற்றும் கார வகைகள் செய்யும் தொழிலாளி. அவர் தற்போது காஞ்சீபுரத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கும், மனைவி கீதாஞ்சலிக்கும் இடைேய குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மேகநாதன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரின் தந்தை வரதராஜன் தூசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News