செய்திகள்
கோப்புப்படம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா- நீலகிரி ஆஸ்பத்திரிகளில் 1,252 படுக்கைகள் தயார்

Published On 2021-05-07 09:48 GMT   |   Update On 2021-05-07 09:48 GMT
நீலகிரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவைப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து எண்ணிக்கை 9 ஆயிரத்து 781 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 51 பேர் இறந்துள்ளனர். மீதமுள்ள 640 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவைப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நான்கு தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நீலகிரியில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 5 கேர் சென்டர் மற்றும் மருத்துவமனைகளில் 1,252 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 427 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மக்கள் அச்சம் கொள்ளாமல், கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். காலதாமதாக செல்வதாலும், அதிக மாத்திரைகள் உட்கொள்வதாலும் நுரையீரல் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என்றனர்.

Tags:    

Similar News