செய்திகள்
ப சிதம்பரம், எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைய இது தான் காரணம்: ப.சிதம்பரம்

Published On 2021-05-04 01:47 GMT   |   Update On 2021-05-04 01:47 GMT
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் தோல்வி அடைய எது காரணம் என்று கூறியுள்ளார்.
காரைக்குடி :

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று செம்மையான ஆட்சியை, திறமையான நிர்வாகத்தை தர எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

மத்திய அரசின் அதிகார பலம், பண பலம், பாரதப்பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் இணைந்து தொடர்ந்து தொடுத்து வந்த உக்கிரமான போர் என எல்லாவற்றையும் எதிர்த்து தன்னந்தனியாக போராடி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மம்தா பானர்ஜிக்கும் அவரது கட்சியினருக்கும் எனது பாராட்டுக்கள்.

எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க.வின் சீடராக மாறி விட்டார். அதுவே அவரது கட்சியின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News