செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

Published On 2021-04-28 11:40 GMT   |   Update On 2021-04-28 11:40 GMT
பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார், பஞ்சேஸ்வரம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஒன்னுப்பள்ளி வெங்கடசாமி (வயது 39), பஞ்சேஸ்வரம் சிவானந்தா (37), கொரட்டகிரி சந்திரப்பா (50) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.150-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஊத்தங்கரை போலீசார், பாம்பாறு அணை அருகே ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த மாரம்பட்டி பிரசாந்த் (27), கணேசன் (27) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல், கந்திகுப்பம் போலீசார் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த சண்முகம் (48), முருகன் (47), ராமசாமி (60) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.3,400-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.3,850 பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News