செய்திகள்
சிதம்பரம் போலீஸ் ஏட்டு கொரோனாவுக்கு பலி
கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரியில் கிசிச்சை பெற்று வந்த சிதம்பரம் போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். (வயது 44). இவர் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜ்குமாருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் தன்னை பரிசோதித்து கொண்டார். அப்போது ராஜ்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அதனை தொடர்ந்து ராஜ்குமார் சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் இன்று காலை இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.