செய்திகள்
தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-04-26 16:27 GMT   |   Update On 2021-04-26 16:27 GMT
காவேரிப்பட்டணம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்:

கர்நாடக மாநிலம் பெங்களூரு வரதபால்யா பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. 

சம்பவத்தன்று பெரியசாமி காவேரிப்பட்டணம் அருகே பந்தேரியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பெரியசாமி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News