செய்திகள்
கோப்புப்படம்

சிதம்பரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-04-26 08:12 IST   |   Update On 2021-04-26 08:12:00 IST
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிதம்பரம்:

சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). தொழிலாளியான இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News