செய்திகள்
கோப்புபடம்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை - 5 பேர் மீது வழக்கு

Published On 2021-04-24 13:43 GMT   |   Update On 2021-04-24 13:43 GMT
காரைக்குடி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமைப்படுத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 30).புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முத்தூரைச் சேர்ந்தவர் பழனிவேல் (31) இருவரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது காதலித்து 2013-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சீதாலட்சுமியின் கல்லூரி படிப்புக்கு கணவர் குடும்பத்தினர் தடை விதித்ததால் கணவன்-மனைவி இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு.

இந்த நிலையில் பழனிவேல் குடும்பத்தினர், சீதாலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதாக தெரிகிறது. பின்னர் வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய தனது கணவர் பழனிவேல் தனது தந்தையுடன் வசித்து வந்து உள்ளார். அவரை பார்க்க சீதாலட்சுமியை அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து சீதாலட்சுமி காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, விசாரணை மேற்கொண்டு சீதாலட்சுமியின் கணவர் பழனிவேல், மாமனார் முத்தையா, மாமியார் ஜெயா மற்றும் பழனிவேலின் சகோதரிகள் 2 பேர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News