செய்திகள்
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 37). விவசாயி. இவர், நேற்று காலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு டீக்கடைக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிளை ஒருவர் திருடி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி அந்த நபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஏலகிரியை சேர்ந்த திருமால் (எ) இன்பரசன் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.