செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் வீட்டுதனிமை மற்றும் தனியார், அரசு மருத்துவமனைகளில் 445 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வீட்டுதனிமை மற்றும் தனியார், அரசு மருத்துவமனைகளில் 445பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் பூரண குணமடைந்த 42 பேர் வீடு திரும்பினர்.