செய்திகள்
அம்பேத்கார் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

அம்பேத்கர் பிறந்தநாள் விழா- கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

Published On 2021-04-15 14:33 GMT   |   Update On 2021-04-15 14:33 GMT
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்த தினத்தையொட்டி சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை:

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்த தினத்தையொட்டி சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி கலெக்டர் அலுவலக முகப்பு வாயிலில் வைக்கப்பட்டு இருந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், உதவி ஆணையர் சிந்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, வட்டாட்சியர்கள் ராஜா, தர்மலிங்கம், ஆதிதிராவிடர்நல அலுவலக கண்காணிப்பாளர் கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News