செய்திகள்
கொரோனா வைரஸ்

காரைக்காலில் சுயேச்சை வேட்பாளர் உள்பட 86 பேருக்கு கொரோனா

Published On 2021-04-13 10:18 GMT   |   Update On 2021-04-13 10:18 GMT
காரைக்காலில் இதுவரை 9 ஆயிரத்து 66 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையொட்டி மாவட்ட நலவழித்துறை சார்பில், தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி 246 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் காரைக்கால் வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் வெங்கடேஷ் உள்பட 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 86 ஆக உள்ளது. காரைக்காலில் இதுவரை 9 ஆயிரத்து 66 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
Tags:    

Similar News