செய்திகள்
வழக்கு பதிவு

குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 54 பேர் மீது வழக்கு

Published On 2021-04-05 17:32 IST   |   Update On 2021-04-05 17:32:00 IST
இளையான்குடி அருகே உள்ள ஆரிப் நகரைச் சேர்ந்தவர்கள் காவிரி கூட்டுக்குடிநீர் கேட்டு நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இளையான்குடி:

இளையான்குடி அருகே உள்ள ஆரிப் நகரைச் சேர்ந்தவர்கள் காவிரி கூட்டுக்குடிநீர் கேட்டு நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியதாக சேகர், ஹாசி பெனடிக்தாஸ், சரவணன், குமார் உள்ளிட்ட 54 பேர் மீது இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அனுமதியின்றி கொரோனா கால விழிப்புணர்வு இல்லாமலும், பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Similar News