செய்திகள்
விபத்து

திருக்கடையூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2021-03-27 16:25 GMT   |   Update On 2021-03-27 16:25 GMT
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அன்னை தெரசா தெருவை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் இளவரசன் (வயது 26). வ.உ.சி. தெருவை சேர்ந்த பாக்யராஜ் மகன் ஸ்ரீராம் (18). இவர்கள் நேற்று திருக்கடையூர் அருகே உள்ள சின்னங்குடிக்கு மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை இளவரசன் ஓட்டி வந்தார். சின்னங்குடி மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளவரசன் பரிதாபமாக இறந்தார். ஸ்ரீராம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News