செய்திகள்
பள்ளி மாணவிகள்

பிளஸ்-1 வரை சிறப்பு வகுப்பு நடத்த கல்வித்துறை தடை

Published On 2021-03-26 10:33 GMT   |   Update On 2021-03-26 10:33 GMT
10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வர உள்ளதால் வகுப்புகள் நடத்தலாம். பெற்றோர் அனுமதி கடிதம் பெற்ற பிறகே வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை பள்ளிக்கல்வித்துறை இணைஇயக்குனர் மைக்கேல் பென்னோ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் 1 முதல் பிளஸ்-1 வரை வழக்கமான அல்லது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. பிளஸ்-2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு வருவதால் சிறப்பு வகுப்பு நடத்தலாம்.

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு வழக்கமான சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.

10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வர உள்ளதால் வகுப்புகள் நடத்தலாம். பெற்றோர் அனுமதி கடிதம் பெற்ற பிறகே வகுப்புகளை நடத்த வேண்டும்.

கொரோனா தொற்றால் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் அவர்களை அனுப்ப கட்டாயப்படுத்தக்கூடாது. பொதுத்தேர்வு நடைபெறும் வரை விதிமுறைகளுடன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

விதிமீறல் தொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News