செய்திகள்
கோப்புப்படம்

காஞ்சீபுரம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-03-25 00:04 IST   |   Update On 2021-03-25 00:04:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 75-ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சீபுரம்:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 75-ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் தனியார் மருத்துவ கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 50 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதே மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவ கல்லூரிக்கு விடுப்பு அளிக்கப்பட்டு விடுதிக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

Similar News