செய்திகள்
உத்திரமேரூர் தொகுதியில் தேர்தல் பார்வையாளர்கள் 3 நாட்கள் ஆய்வு
வேட்பாளர்கள் தேர்தல் செலவு பதிவேட்டை தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை, தேர்தல் செலவின மேற்பார்வையாளர் ஆய்வு செய்ய இருப்பதால் வேட்பாளர்கள் நேரிலோ அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ தங்களது தினசரி தேர்தல் செலவின பதிவேடு மற்றும் பட்டியல், வங்கி கணக்கு விவரம் போன்றவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் நாளை(வியாழக்கிழமை), வருகிற 30-ந்தேதி, அடுத்த மாதம் 4-ந்தேதிகளில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் தேர்தல் செலவு பதிவேட்டை தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் செலவு பதிவேட்டை தாக்கல் செய்யத் தவறிய காரணத்திற்காக தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை, தேர்தல் செலவின மேற்பார்வையாளர் ஆய்வு செய்ய இருப்பதால் வேட்பாளர்கள் நேரிலோ அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ தங்களது தினசரி தேர்தல் செலவின பதிவேடு மற்றும் பட்டியல், வங்கி கணக்கு விவரம் போன்றவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் நாளை(வியாழக்கிழமை), வருகிற 30-ந்தேதி, அடுத்த மாதம் 4-ந்தேதிகளில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் தேர்தல் செலவு பதிவேட்டை தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் செலவு பதிவேட்டை தாக்கல் செய்யத் தவறிய காரணத்திற்காக தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.